கொரோனா எதிரொலி! 2023 வரை கிரிக்கெட் போட்டிகளின் நிலைமை!

கொரோனா எதிரொலி! 2023 வரை கிரிக்கெட் போட்டிகளின் நிலைமை!

கொரோனா எதிரொலி காரணமாக 2023 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் உள்பட பல கிரிக்கெட் தொடர்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசு கொரொனா வைரஸை தடுக்கும் விதமாக இன்னும் 6 மாதத்துக்கு வெளிநாட்டவர் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டி 20 உலகக்கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் ஐசிசி 2023 ஆம் ஆண்டு வரையிலான தங்கள் கிரிக்கெட் தொடர் தொடர்பான அட்டவணைகளை மாற்றியமைக்க முடிகிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதோடு, ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.