பறிமுதல் செய்யப்பட்ட 500பச்சைக்கிளிகளை வனத்துறையினர் பறக்க விட்ட அபூர்வ காட்சிகள்

பறிமுதல் செய்யப்பட்ட 500பச்சைக்கிளிகளை வனத்துறையினர் பறக்க விட்ட அபூர்வ காட்சிகள்

பச்சைக்கிளிகள் பார்ப்பதற்கு அழகாகவும் அருமையாகவும் இருக்கும். மனிதர்கள் பேசுவதை பேசும் ஒரே இனம் பச்சைக்கிளிகள் இனம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பச்சைக்கிளியின் மழலை பேச்சு அருமையாக இருக்கும்.

வனத்துறை சட்டப்படி பச்சைக்கிளி வளர்க்க அனுமதி பெற வேண்டும். இருப்பினும் பலர் பச்சைக்கிளிகளை அதிகமாக பிடித்து விற்று வருகின்றனர்.

இப்படி சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பச்சைக்கிளிகளை திருச்சி மாவட்ட வனத்துறையினர் பிடித்தனர். அவற்றில் சிறகு உடைக்கப்பட்ட பல பச்சைக்கிளிகளுக்கு வைத்தியம் செய்து 500 கிளிகளையும் சுதந்திரமாக பறக்க விட்டனர்.