---Advertisement---

சென்னையில் கொரொனா சிகிச்சை மையங்கள் குறித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் புதிய அறிவிப்பு!!

By Sri
Published on: April 20, 2020
Chennai Corporation
---Advertisement---

கொரொனா தொற்று இன்னும் சில தினங்களில் படிப்படியாக குறையும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென்று நேற்றைய தினமான ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் 100ஐ தாண்டியது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரொனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையில் மட்டுமே இதுவரை 285 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கூறுகையில், சென்னையில் 26 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அம்பத்தூர், மணலி பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றாலும் பரிசோதனை செய்ய திட்டம் உள்ளதாக அறிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.