தமிழ் சினிமா உலகில் எதார்த்தமான கதைகளையும், கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நம்ம சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது ஆர்யா தனது திரையுலக பயணத்தின் மிக முக்கிய மைல்கல்லான “ஆர்யா 40” (#Arya40) திரைப்படத்தில் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்பொழுது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரபல மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில், மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அனைத்து காட்சிகளும் பக்காவாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. “நிறைய சிரிப்புடனும் அன்புடனும் இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது, படப்பிடிப்பு முடிந்தாலும் எங்களின் இந்த புன்னகை என்றும் நிலைத்திருக்கும்” என்று படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா சங்கர் மற்றும் ஜோதிஷ் ஆகியோர் இந்த படத்தில் மிக முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதை அடுத்து, இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து மிக விரைவில் வெளியாகவுள்ளதால் ஆர்யாவின் ரசிகர்கள் தற்பொழுது செம குஷியிலும் ஆவலோடும் காத்துக்கிட்டு இருக்காங்க.













