இந்திய திரையுலகில் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பேசும் படம் எனப் பல காலத்தால் அழியாத காவியங்களைக் கொடுத்த லெஜண்டரி இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரின் கூட்டணி எப்போதுமே தமிழ் சினிமாவிற்கு மிகவும் ஸ்பெஷலானது. தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜாம்பவான் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உலகளவில் தியேட்டர்களில் வெளியாகக் காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தான் “சிங் கீதம்” (Sing Geetham). இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த ஒரு மரண மாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள பிரசாத் லேப்ஸில் (Prasad Labs) நாளை ஜூன் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த ‘சிங் கீதம்’ இசை திருவிழா கொண்டாட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் பெருமையான நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் தலைமை விருந்தினராக நேரில் வருகை தந்து சிறப்பிக்க உள்ளார். தனது குருநாதர் போன்ற சிங்கீதம் சீனிவாசராவ் படத்திற்காக உலகநாயகன் நேரில் வரவிருக்கும் இந்த செய்தி தற்பொழுது சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல முன்னணி தயாரிப்பாளர் நாக் அஸ்வின் தயாரிப்பில், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) இசையமைத்துள்ளார். ஒட்டுமொத்த ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ‘சிங் கீதம்’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 11ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. நாளை உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொள்ளும் இந்த மாஸ் ஆடியோ விழா அப்டேட்டால் தற்பொழுது சோசியல் மீடியா முழுக்க ஒரே சிங்கீதம் பேச்சாகவே அடிபட்டு வருகிறது.













