கொரொனா தொற்று தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நோயக்கான நிலையான மருந்துகளோ, மாத்திரைகளோ இப்போதுவரை கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இதற்கான தடுப்பு ஊசியினை மட்டும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மூம்மூறம் காட்டி வருகின்றன.
இதற்கிடையில், கொரொனா குறித்த விழிபுணர்வுகளை அரசாங்கமும், மருத்துவர்களூம் மக்களிடன் அன்றாடம் அறிவுறுத்தி வருகின்றனர். அதில், முக்கியாமாக காய்கறிகள், பழங்கள் என உட்கொள்வதை காட்டிலும், இந்த நோய்யை எதிர்த்து போராட கூடிய நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்று பரிந்துரைத்து இருப்பதை பார்க்கலாம்.
தமிழக அரசு, கொரொனாவில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என்றும், இது கொரோனாவுக்கான சிகிச்சை அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையே என்றும் பரிந்துரைத்துள்ளது.







