மலையாளத் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமல்லாமல், முதல் படமான ‘பனி’ (Pani) மூலமாக இயக்குனராகவும் முத்திரை பதித்தவர் ஜோஜு ஜார்ஜ் (Joju George). ‘பனி’ திரைப்படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், ஜோஜு ஜார்ஜ் தனது இரண்டாவது இயக்கமான ‘பரிபாடி’ (Paripadi) படத்தின் அறிவிப்பை இன்று ஏப்ரல் 17, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே இதன் தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja), ‘பரிபாடி’ படத்தின் மூலம் நேரடி மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். யுவனின் பிஜிஎம் (BGM) மற்றும் ஜோஜுவின் மேக்கிங் இரண்டும் சேரும்போது படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram
“இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் – இசையமைப்பாளர் யுவன்” என ஒரு மெகா கூட்டணி இப்போ மலையாளத்துல தயாராகியிருக்கு.
வேணு குன்னப்பள்ளி (Venu Kunnappilly) தனது காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பாக இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி (Rajeev Ravi) மற்றும் தேசிய விருது வென்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் (Anbariv) ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் பூஜை இன்று சாலக்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 புதுமுக நடிகர்கள் இந்தப் படத்திற்காக கடந்த 3 மாதங்களாகப் பயிற்சி எடுத்துள்ளனர்.
மலையாளத்தில் இருந்து வந்துள்ள இந்த ‘பரிபாடி’ அப்டேட் சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் இந்தப் படத்தில் இயக்குவதுடன் கதையை எழுதி ஹீரோவாகவும் நடிக்கிறார். இயக்குனராக பிஸியாக இருந்தாலும், நடிகராக ஜோஜுவின் ‘வரவு’ (Varavu) மே 1-ம் தேதியும், ‘அஜ சுந்தரி’ (Aja: Sundari) ஜூன் 19-ம் தேதியும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.













