இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் எல்லைகளை உலகளவில் விரிவுபடுத்திய பிரம்மாண்ட காவியம் ‘பாகுபலி’. ‘பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் ‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ ஆகிய படங்களின் அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து, மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் அந்த பிரம்மாண்ட கதைக்களம் தற்பொழுது அடுத்த கட்ட சர்வதேச உயரத்தை எட்டியுள்ளது. பாகுபலி பிரான்சைஸின் அதிகாரப்பூர்வ தொடர்ச்சியாக, இரு பாகங்களாக மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அனிமேஷன் திரைப்படம் ‘பாகுபலி: தி எடர்னல் வார்’ (Baahubali: The Eternal War). இத்திரைப்படம் தற்பொழுது அனிமேஷன் உலகின் ‘கான்ஸ் திரைப்பட விழா’ என்று உலகளவில் புகழப்படும் பிரான்சின் ‘அனிசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விழா 2026’-ல் (Annecy Festival) அதிகாரப்பூர்வமாகத் தடம் பதித்துள்ளது.
இந்த சர்வதேச விழாவின் மிகவும் கௌரவமிக்க ‘ஒர்க் இன் புரோகிரஸ்’ (Work in Progress – WIP) பிரத்தியேக அமர்வில் சமர்ப்பிக்கப்படுவதற்காக ‘பாகுபலி: தி எடர்னல் வார்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஆஸ்கார் வென்ற ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த மாஸ்டர்பீஸ் அனிமேஷன் படங்கள் தங்களது ஆரம்பகட்ட உருவாக்கத்தின் போது இந்த ‘ஒர்க் இன் புரோகிரஸ்’ பிரிவில்தான் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உயரிய வரிசையில் தற்பொழுது இந்தியாவிலிருந்து பாகுபலி இணைந்துள்ளது. இந்த விழாவில் ‘பாகுபலி: தி எடர்னல் வார்’ படத்திற்கான குழுவினர் பங்கேற்கும் பிரத்யேக பேனல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடங்களில் (Sold out within 2 minutes) ஒட்டுமொத்தமாக விற்றுத் தீர்ந்து உலக அரங்கில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
I have always believed animation offers a canvas with no boundaries. It is a rare honor for Indian mainstream cinema that Baahubali: The Eternal War has been selected for the Work in Progress lineup at Annecy 2026.@Shobu_ garu, @_Ishan_Shukla and the whole team is elated to… pic.twitter.com/VWcUSZWJlM
— rajamouli ss (@ssrajamouli) April 15, 2026
விருது வென்ற சர்வதேச இயக்குநர் இஷான் சுக்லா (Ishan Shukla) இயக்கத்தில், மாபெரும் அனிமேஷன் ஸ்டூடியோக்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி உலக அரங்கில் பிரம்மாண்டமாக வழங்குகிறார். பாகுபலி 2 திரைப்படத்தின் முடிவுக்குப் பிறகு, மரணமடைந்த மாவீரன் அமரேந்திர பாகுபலி மேல் உலகிற்குச் சென்று அங்கு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே 14 லோகங்களில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட தர்ம யுத்தத்தில் பங்கேற்பதுதான் இந்த ‘தி எடர்னல் வார்’ படத்தின் மயிர்க்கால்களைச் சிலிர்க்க வைக்கும் ஒன்லைன் கதையாகும். இந்த அனிமேஷன் திரைப்படத்தில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரபாஸும், சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு நடிகை ரம்யா கிருஷ்ணனும் தங்களது சொந்தக் குரலிலேயே டப்பிங் (Voice Cast) பேசி உயிர் கொடுத்துள்ளனர்.
மெகாஸ்ட்ரோ எம்.எம். கீரவாணியின் மிரட்டலான இசை மற்றும் சர்வதேச தொழில்நுட்பக் கலைஞர்களின் விஎஃப்எக்ஸ் (VFX) உழைப்பில் உருவாகி வரும் ‘பாகுபலி: தி எடர்னல் வார் – பாகம் 1’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகத் திட்டமிடப்பட்டுள்ளது.













