தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கூட்டணியில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் நடிகர் கார்த்தியின் புதிய படம் இணைந்துள்ளது.
இப்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான கதாநாயகி தேர்வு (Heroine Hunt) தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவைத் தேர்வு செய்ய இயக்குநர் மோகன் ராஜா தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில், இக்கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. மேலும், மோகன்ராஜா இயக்கத்திலும் நயன்தாரா இதற்கு முன்பு வெற்றிகரமான படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தேதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்த த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. நயன்தாரா அல்லது த்ரிஷா ஆகிய இரு முன்னணி நடிகைகளில் யார் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.













