தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் இயக்குநர் சங்கர். தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பிரம்மிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்ட செட்டுகள் மூலம் இந்திய சினிமாவையே வியக்க வைக்கும் சங்கர், தற்பொழுது தனது திரைப்பயணத்தின் மிக முக்கியமான மற்றும் லட்சிய கனவுத் திரைப்படமான ‘வேள்பாரி’ (Velpaari) நாவலைத் திரைப்படமாக எடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் சு. வெங்கடேசனின் புகழ்பெற்ற இந்த நாவலை சுமார் 3 பாகங்களாக (3-Part Movie), ஹாலிவுட்டின் ‘அவதார்’ (Avatar) திரைப்பட பாணியில் புத்தம் புதிய தொழில்நுட்பங்களை உலகத்தரம் வாய்ந்த விஷுவல்ஸுடன் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், இந்த பிரம்மாண்ட வேள்பாரி உலகத்தை உருவாக்க ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் (₹1000Cr Funding) பட்ஜெட் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய சர்வதேச தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்கும் பொருட்டும், பாக்ஸ் ஆபீஸில் தனது அசாத்திய மேக்கிங் திறனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கவும் சங்கர் தற்பொழுது ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். வேள்பாரி படத்திற்கு முன்பாக, மிகவும் குறுகிய காலத்தில் ஒரு அதிவேக ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை (Sharp and Fast-paced Action Thriller) இயக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இளம் ஹீரோக்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த விறுவிறுப்பான திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் வெறும் 70 நாட்களுக்குள் (Shot within 70 days) நடத்தி முடிக்க சங்கர் திட்டமிட்டுள்ளார். லீனியர் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் மிக வேகமாகத் தயாராகவுள்ள இந்த “குவிகி” (Quickie) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூலை 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 1000 கோடி பட்ஜெட் ‘வேள்பாரி’ படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கும் என்று எதிர்ப் பார்க்கப்படுகின்றது.













