தமிழ் சினிமா உலகில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மோத ராத்திரி’. இப்படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா அனில் குமார் களம் இறங்கியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.
மேலும், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இப்படத்தில் ரிஷிகாந்த் ‘மருதநாயகம்’ என்ற கதாபாத்திரத்தில் ‘துபாய் மாப்பிள்ளை’ கெட்டப்பில் கலக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கிராமத்து மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்ட நகைச்சுவை மற்றும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட குடும்பப் படமாக (Kudumbapadam) இது உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













