பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஒட்டுமொத்தமாக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரே திரைப்படம் பிரம்மாண்ட இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌளி மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் “வாரணாசி” (Varanasi) தான். பான் இந்தியா மற்றும் சர்வதேச சாகசப் பாணியில் மிகவும் ரகசியமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் கதைக் களம் குறித்து தற்பொழுது இந்த படத்தின் கதையாசிரியரும், ராஜமௌளியின் தந்தையுமான கே வி விஜயேந்திர பிரசாத் ஒரு வெறித்தனமான அதிகாரப்பூர்வ உண்மையை உடைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய விஜயேந்திர பிரசாத், வாரணாசி திரைப்படத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கப் போகும் ஒரு பிரம்மாண்டமான 30 நிமிட சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பலரும் அது என்ன மாதிரியான காட்சி என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அது ராமாயண இதிகாசத்தின் மிக உக்கிரமான போர்களில் ஒன்றான “ஸ்ரீ ராமர் மற்றும் கும்பகர்ணன்” ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் மரண மாஸ் யுத்தம் தான் என்பதை அவர் தற்பொழுது ஓப்பனாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும் (ராமர் அவதாரம்), மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ (கும்பகர்ணன் அவதாரம்) என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியான இதன் அறிமுகத் துண்டில் ராமர், ஆஞ்சநேயரின் வால் மற்றும் ரதம் ஆகியவை காண்பிக்கப்பட்ட நிலையில், இந்த 30 நிமிட ராமாயணப் போர் காட்சி ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைக்கப் போவது தற்பொழுது நூறு சதவீதம் உண்மையாகியுள்ளது. தற்பொழுது இந்த வெறித்தனமான செய்தி வெளியானதால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் செம குஷியிலும் மரண வெறியிலும் காத்துக்கிட்டு இருக்காங்க.













