இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4ம் கட்ட ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக, கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? போன்ற சந்தேங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பரவல், அதிதீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளை தொடர்ந்து கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா முழுவதும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகே திறக்கப்படும் என்றும், கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும், மாணவர் சேர்க்கையும் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.







