உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அசீம் மன்சூரி, கடந்த 5 ஆண்டுகளாக இவர் தனக்கு பெண் தேடி வருகிறாராம். இருந்தும் பெண் கிடைக்க இயலாத நிலை உள்ளது.
முசாபர் நகரில் கைரானா என்ற இடத்தை சேர்ந்த அசீம் மன்சூரி தாம் 2 அடி மட்டுமே இருப்பதால் பெண் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் கடந்த அகிலேஸ் யாதவ் ஆட்சியிலேயே அவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.
தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ள அசீம் தற்போது உத்தரப்பிரதேச காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.













