சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரது கணவர் அரூண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்த சம்பவம் இவருக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்ருதி, தற்போது தனது வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் தனது இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து ஸ்ருதி சண்முகப்பிரியா கூறுகையில், “எனது பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் நல்விருப்பாளர்கள் அனைவரும் என்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். தனித்து வாழ்வதா அல்லது மறுமணம் செய்து கொள்வதா என்பது முற்றிலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. ஒருவேளை எதிர்காலத்தில் எனக்குப் பிடித்தமான ஒருவரைச் சந்தித்து மீண்டும் திருமணம் செய்துகொண்டால், என் மறைந்த கணவர் அரூண்தான் அந்த நபரை என் வாழ்க்கைக்கு அனுப்பிய காவல்100% தேவதையாக (Guardian Angel) இருப்பார் என்று நான் எப்போதும் நம்புவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர் தைரியமாகவும் பக்குவமாகவும் எடுத்துரைத்துள்ள இந்த விழிப்புணர்வு மிக்க கருத்துகளுக்கு பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.













