தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியான நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை குறித்து மனம் திறந்து பல சுவாரஸ்சியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “No Love, No Parties, No Alcohol” என்ற தலைப்பில் அவர் கூறியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தான் தனிமையையும், சுய-அன்பையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நான் இப்போது மகிழ்ச்சியான சிங்கிளாக இருக்கிறேன். கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக யாருடனும் எந்தவிதமான உறவிலும் இல்லை. எனது கடைசிப் பிரிவு குறித்து அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து நான் யாருடனும் உறவில் இருக்கவில்லை. என் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனக்கு காதலோ அல்லது உறவுகளோ தேவையில்லை என்று உணர்கிறேன். நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நானே நேசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பார்ட்டி மற்றும் குடிப்பழக்கம் குறித்த வதந்திளுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். “கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் எந்தவொரு வெளிப்பார்ட்டிகளுக்கும் சென்றது கிடையாது. இருப்பினும், நாங்கள் எங்கள் வீட்டிலேயே சிறிய கூட்டங்களை நடத்துகிறோம். எங்கள் வீட்டில் பார் அமைப்பு, லேசான இசை மற்றும் மதுபானம் ஆகியவை உள்ளன, மேலும் யார் வேண்டுமானாலும் வீட்டிற்கு வந்து நல்ல நேரத்தை செலவிடலாம். ஆனால், என்னை பொறுத்தவரை நான் மது அருந்துவதில்லை” என்று யாஷிகா ஆனந்த் தெளிவுபடுத்தியுள்ளார். இவரது இந்தப் பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.













