தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் அபியங்கர் (Sai Abhyankkar). தனது துள்ளலான பாடல்கள் மூலம் குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் (Thalapathy Vijay) குறித்துப் பேசியுள்ள உணர்ச்சிகரமான வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தளபதி விஜய்யுடன் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இழந்தது குறித்துப் பேசிய சாய் அபியங்கர், “என்னை சென்டிமென்ட் ஆக்கிடாதீங்க ப்ளீஸ்… என் வாழ்க்கையில் நான் மிஸ் செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம் இதுதான் என்று நினைக்கிறேன். இது இனி சாத்தியமில்லை, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்காக நான் ஒரு 16 ட்ராக்குகள் கொண்ட மாஸான ஆல்பத்தைக் கொடுத்திருப்பேன்” என்று தனது ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த வாய்ப்பை ரொம்பவே மிஸ் பண்றேன்… அவர் இதற்கு முன்பு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே நாயகனாக இருந்தார், ஆனால் இப்போது அவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒருமனதாக உண்மையான ஹீரோவாக உயர்ந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்” என்று விஜய் மீதான தனது நல்மதிப்பையும், மரியாதையையும் அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.













