தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தின் மகனும், ‘சிக்மா’ (Sigma) படத்தின் மூலம் இயக்குநராகக் களமிறங்கும் ஜேசன் சஞ்சய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.
சிறு வயதில் பைலட் அல்லது கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பின்னர் திரைப்படத் துறையை நோக்கித் தனது பயணத்தைத் திருப்பியது குறித்துப் பேசியுள்ளார். முதல் ஐபிஎல் (IPL) சீசனின் போது தனது தந்தை விஜய் தன்னை அழைத்துச் சென்ற நினைவுகளையும் அவர் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
தனது ஃபேவரட் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ‘சிக்மா’ படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜேசன் சஞ்சய், அவரை முதல்முறை சந்தித்துப் பேசிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அவரிடம் தனது தந்தை விஜய்யின் நலம் விசாரித்ததாகவும், அவர் ஏன் அடிக்கடி சென்னை வராமல் துபாயில் செட்டில்லாகிட்டங்க? என்று கலகலப்பாகக் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் towering personality-யாகத் திகழும் தந்தை விஜய்யின் லெகசியைக் கொண்டு செல்வது குறித்துப் பேசுகையில், “இது இப்போது நடந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சி. எனக்கும், என் தங்கைக்கும் மற்றும் குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் இது ஒரு கூடுதல் பொறுப்பு. என் தந்தை எனக்குச் சொந்தமான அடையாளத்தை உருவாக்க விரும்பினார். எந்த உதவியாக இருந்தாலும் நீங்களே முன்வந்து கேளுங்கள் என்று அவர் சுதந்திரம் அளித்துள்ளார்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.













