தமிழக அரசியல் மற்றும் சினிமா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, நடிகர் ‘தளபதி’ விஜய் தற்பொழுது தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து புதிய ஆட்சியைத் தொடங்கியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், கோலிவுட்டின் முன்னணி ஆக்ஷன் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷால், சிஎம் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, விஷால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள மிக நெகிழ்ச்சியான எக்ஸ்க்ளூசிவ் அறிக்கை தற்பொழுது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி ட்ரெண்டாகி வருகிறது.
Dearest darling CM Vijay @CMOTamilnadu
The word “darling “ hasn’t changed which I used to call u for the last so many years since i knew u from Loyola college. It all started wen I got to know you as a budding star and then seeing u rise up the ladder as the SUPERSTAR facing… pic.twitter.com/iTLAeCZ3cp
— Vishal (@VishalKOfficial) June 16, 2026
அதில் விஷால் குறிப்பிட்டிருப்பதாவது: “என்னுடைய அன்பிற்குரிய டார்லிங் சிஎம் விஜய் அவர்களுக்கு, லோயோலா கல்லூரி (Loyola College) காலத்தில் இருந்து உங்களை எனக்குத் தெரியும். அன்று முதல் கடந்த பல ஆண்டுகளாக உங்களை நான் அழைத்து வரும் இந்த ‘டார்லிங்’ என்ற வார்த்தை இன்றும் மாறவில்லை. ஒரு வளரும் நட்சத்திரமாக உங்களைப் பார்க்கத் தொடங்கி, அதன்பின் அனைத்து தடைகளையும், விமர்சனங்களையும் உங்களது மௌனத்தாலும் உழைப்பாலும் தகர்த்து எறிந்து ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ நீங்கள் உயர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். தற்பொழுது அதையெல்லாம் கடந்து நம் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்” என்று விஜய்யின் அசுர வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார்.
மேலும் பேசிய விஷால், “இன்று உங்களுடைய பதவியும் அந்தஸ்தும் மாறியிருக்கலாம், ஆனால் நீங்கள் குணத்தால் மாறவே இல்லை. உங்களை நேரில் சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, அதே பழைய அன்பான அரவணைப்பை இப்போதும் என்னால் உணர முடிந்தது. கலைஞர் அய்யா, ஜெயலலிதா அம்மா, ஸ்டாலின் அங்கிள் முதல் என்னுடைய சொந்த தம்பி உதயநிதி வரை பலரைக் கடந்து, தற்பொழுது நமது மாநிலத்தின் முதலமைச்சரையே ‘டார்லிங்’ என்று அழைப்பது எனக்குள் இருக்கும் ரசிகனை (Fanboy) எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அரசு விதிமுறைப்படி கட்டாயமாகத் தரப்படும் பூங்கொத்து மற்றும் சால்வைகளை நீங்கள் ஏற்க மாட்டீர்கள் என்கிற உன்னதமான கொள்கையை நான் மதிக்கிறேன். அதற்குப் பதிலாக, அந்த தொகையைக் கொண்டு உங்களது பெயரிலும், உங்களது சார்பிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான, பின்தங்கிய 3 பெண் குழந்தைகளின் கல்விச் செலவை (Educate 3 Girl Children) நான் ஏற்றுள்ளேன். அவர்கள் உங்களை எப்போதும் பெருமையோடு நினைவில் கொள்வார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த புதிய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று முதலிடம் பெற வாழ்த்துவதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார். சால்வை மற்றும் ஆடம்பரங்களை விடுத்து, முதலமைச்சர் விஜய் பெயரில் விஷால் செய்துள்ள இந்த கல்வி உதவி குறித்த செய்தி பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.













