இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று மட்டும் 60 பேருக்கு, திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு, கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, இன்று கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கொரொனா தொடர்பான நடவடிக்கைகளையும், சிறப்பு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
அதன்படி,
>>தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்: நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது
>>மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவசம் போல் பயன்படுத்தலாம்
>>பேசும்போது சிலர் முகக்கவசத்தை கழற்றியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
>>சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் சவாலான பகுதிகளாக உள்ளன
>>வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவையில்லை
>>கடைகளில் பணியாற்றுபவர்களுக்கும், வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு
>>கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்
>>அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம். அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவை இல்லை
என கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.







