கோவிட்-19 வைரஸ் பரவலால், இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் துறையில் வேலை செய்பவர்கள் முதல் தினக்கூலிகளும் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனை அடுத்து தமிழக அரசு, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகிய அத்தியவாசிய பொருட்களை ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மற்றொருபுறம், இந்த ஊரடங்கு உத்தரவால் பெண்களுக்கான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
இதனைத்தொடர்ந்து இதற்கு தீர்வு அளித்துள்ளது தமிழக அரசு. ஊரடங்கு சமயத்தில் அவசரத் தேவைகளுக்கான எண்களையும் மற்றும் பெண்களுக்கு நேரிடும் வன்கொடுமைகள் தொடர்பான உதவி எண்களையும் வெளியிடப்பட்டுள்ளது. கொரொனா தொடர்பான விளக்கங்கள், முதியோர், குழந்தைகள், விலங்குகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்திற்கு உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது.








