கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகராக்கும் பொருட்டு தீர்மானம் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் கேரள தேவசம் போர்டு முதல் முறையாக வேறு ஜாதியை சேர்ந்த 36 பேரை அர்ச்சகராக நியமித்தது.
இவர்கள் முறைப்படி ஆகமம் பயின்றவர்களாவர். இவர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று பூஜை செய்யும் அனுமதியை கேரள அரசி வழங்கி இருந்த நிலையில் 36 பேரில் 6 தலித் பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
நேற்று முதல் 36 அர்ச்சகரில் முதல் அர்ச்சகராக தலித் பிரிவை சேர்ந்த ஏடு கிருஷ்ணன் என்பவர் திருவல்லா அருகேயுள்ள மணப்புரம் சிவன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர்.
அவருடைய குரு அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று பொறுப்புகளை எடுத்துக்கொண்டார் ஏடு கிருஷ்ணன். இவர் முறைப்படி சமஸ்க்ருதமும் பயின்றவராவார்.
இன்று முதல் இவர்கள் கர்ப்பகிரகத்துக்குள் சென்று பூஜை செய்யும் உரிமையை பெறுகின்றனர்.













