தமிழ் திரையுலகில் அண்மையில்தான் சினிமா பிசினஸில் நிலவும் குழப்பங்கள் மற்றும் தியேட்டர்கள் சந்திக்கும் நஷ்டங்கள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் மேடைகளில் ஓப்பனாகப் பேசி, அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில்தான், ஒட்டுமொத்த கோலிவுட் இண்டஸ்ட்ரியையும், தியேட்டர் உரிமையாளர்களையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தியேட்டர் விதிகளில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
திரைத்துறையினரின் மிக முக்கியமான கோரிக்கைகளை மிகவும் கனிவோடு பரிசீலித்த முதலமைச்சர் விஜய், இனி தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன முதல் ஒரு வாரத்திற்கு (First Week) தினசரி 5 காட்சிகள் திரையிட அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, உள்ளூர் விடுமுறை நாட்கள் (Local Holidays) மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் (Government Holidays) தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி மூவ், படங்களின் வசூலை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப் போவது உறுதி.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து⁰மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு#CMJosephVijay pic.twitter.com/RpUK6AL8kC— CMOTamilNadu (@CMOTamilnadu) May 25, 2026
இதில் மிக முக்கியமான ஹைலைட் என்னவென்றால், “தியேட்டர்களில் இனி தினசரி 5 காட்சிகள் திரையிடுவதற்கு அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் பிரத்தியேக அனுமதி எதுவும் தனியாகத் தேவையில்லை” என விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு தியேட்டர் ஒழுங்குமுறை விதிகளில் (Theatre Rules) முறைப்படி அதிரடி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சிறப்பு மற்றும் கூடுதல் காட்சிகளைத் திரையிட ஒவ்வொரு முறையும் தியேட்டர் உரிமையாளர்கள் பல்வேறு அரசு அலுவலகங்களில் சிறப்பு அனுமதி வாங்க வேண்டி இருந்தது. இனி அந்த அலைச்சல்களும், காலதாமதங்களும் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது தியேட்டர் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி அரசாணை வெளியான சில நிமிடங்களிலேயே, ஒட்டுமொத்த சோசியல் மீடியா சினிமா குரூப்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்களில் இதுதான் தற்போதைய டாப் ட்ரெண்டிங் டாக்கின் பாயிண்ட்டா மாறியிருக்கு. பாக்ஸ் ஆபீஸில் படங்கள் முதல் வாரத்திலேயே தங்களது பட்ஜெட்டை வசூல் செய்ய இந்த 5 காட்சிகள் நடைமுறை மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என ட்ரேட் அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவித்து வர்றாங்க. திரைத்துறைக்கு இவ்வளவு பெரிய சலுகையை வாரி வழங்கிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது மனமார்ந்த நன்றிகளை சோசியல் மீடியாக்களில் மாஸாகத் தெரிவித்து வர்றாங்க.













Swathi Reddy’s Bold Marriage Comment! — “கல்யாணம் பண்ணி நிம்மதியை இழக்கரதவிட — நாய் வளர்ப்பதே பெட்டர்!”; ஓப்பனாகப் பேசிய சுவாதி ரெட்டி!