---Advertisement---

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு! எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்?

By Sri
Published on: April 23, 2020
tasks sanctioned during #curfew
---Advertisement---

கொரொனாவின் தாக்கம் இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, நோய் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 20க்கு பிறகு சில ஊரடங்கு தளர்வுகளை, அந்த அந்த மாநில அரசுகள் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துயிருந்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் குறித்து இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து வரும் மே 3ம் தேதிக்குள் ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில பணிகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளார்

அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்…?
>மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்
>குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி
>கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி
>நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளது தமிழக அரசு

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.