இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. மேலும், உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில், தொடர்ந்து சென்னை நோய் தொற்றில் முதலிடம் வகித்து வருகின்றது. சென்னையில் தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் நோய் தொற்று அதிகமானதால், சுகாதாரத்துறை அதிதீவிரமாக கண்காணித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 688 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,760 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 19ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:









