---Advertisement---

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் வைத்த கோரிக்கை

By Sri
Published on: April 5, 2020
President Trump
---Advertisement---

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிடம் கொரொனா மருந்தை கேட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

hydroxychloroquine
hydroxychloroquinePre

உலகையே சூறையாடி வரும் கொரொனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், இந்தியாவிலும் கொரொனா நுழைந்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் கொரொனா தொடர்பான கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி, இருநாட்டு தலைவர்களும் கொரொனா தொடர்பான உரையாடல்களை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். அதன்படி இந்திய அரசு ஏற்கனவே கொரொனா மருந்தான ஹைட்ராக்சிக்குளோரோகுயின் ஏற்றுமதி சேவையை நிறுத்தியது. அதுமட்டுமின்றி ஹைட்ராக்சிக்குளோரோகுயின் மருந்தை தயாரிக்க பயன்படும் இன்னும் சில மருந்துகளையும் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

Modi and Trump
Modi and Trump

இந்நிலையில், அமெரிக்காவில் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமன்றி அடுத்து வரும் வாரங்களில் அமெரிக்காவில் அதிக அளவிலான உயிரிழப்புகள் நேரிடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதனால் ஹைட்ராக்சிக்குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு தருமாறு தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இந்திய பிரதமரும் கொரொனா வைரஸை எதிர்த்துப் போராட இந்திய அரசுயின் பங்களிப்பு தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.