நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் தற்போது கனடாவில் மாட்டிக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் இதுவரை 18,00,000 பேருக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,13,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் சென்று படிப்பவர்கள், மற்றும் அங்கு வேலைப்பார்ப்பவர்கள் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி இருப்பதாக விஜய்க்கு தகவல் கிடைத்தது
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விஜய் மகனின் நிலைமையை நினைத்து சோகமாக இருப்பதாகவும் கனடாவில் மகன் தனியாக இருப்பதை அறிந்து அவரும் அவருடைய குடும்பத்தினரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது . ஆனால் கனடாவில் கொரோனா ஆபத்து மிகவும் கம்மியான அளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.









