தமிழ் சினிமாவில் ‘தி கோட்’ (THE GOAT) படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து யாரை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை அவர் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, அந்த படம் கைவிடப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய படம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நாளை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெறவுள்ளது. பிரதீப் ரங்கநாதன் தற்போது தனது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் வெற்றியை தொடர்ந்து செம பார்மில் இருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபுவும் இளைஞர்களை கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் கதையை தயார் செய்துள்ளாராம். இந்த கூட்டணி இணைந்தால் அது தமிழ் சினிமாவின் ஒரு தரமான யூத் ஃபுல் எண்டர்டெய்னராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்காக உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் பட்ஜெட் மற்றும் கால்ஷீட் காரணங்களால் தள்ளிப்போனது தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எஸ்கே தற்போது ‘சேயோன்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக இருப்பதால், வெங்கட் பிரபுவின் படத்திற்கு உடனடியாக தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதனால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதே பேனரில் சிவகார்த்திகேயனுக்கு வேறொரு படத்தை பண்ணவும், வெங்கட் பிரபுவை பிரதீப்புடன் இணைக்கவும் முடிவு செய்துள்ளதாம்.
லவ் டுடே மற்றும் டிராகன் படங்களுக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் எகிறியுள்ளதால் இந்த காம்போவிற்கு அதிக டிமாண்ட் நிலவுகிறது. வெங்கட் பிரபுவின் வழக்கமான ‘கேங்’ காமெடி மற்றும் பிரதீப்பின் யூத்ஃபுல் மேனரிசம் இணைந்தால் அது பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை நடக்கும் மீட்டிங்கிற்கு பிறகு இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்கே ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும், பிரதீப் ரசிகர்களுக்கு இது ஒரு டபுள் ட்ரீட் தான்!













