---Advertisement---

பன்னிரண்டாம் வகுப்பில் நீங்க இந்த பிரிவுகளில் படித்திருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு தற்காலிகமா சுகாதாரத்துறையில் வேலை!

By Sri
Published on: April 24, 2020
+12 science students
---Advertisement---

தமிழகத்தில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அது தீவிரமடைந்து வருவதால், தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவ துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பணிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கும் தற்காலிகமாக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 12ஆம் வகுப்பில் உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பிரிவுகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் குறிப்பாக ஆண்கள் மட்டுமே தற்காலிகமாக சுகாதார மேற்பார்வையாளர் நியமிக்கப்படுகிறார்கள். பல்துறை சுகாதார பணியாளர்களாக நியமிக்கப்படும் மேற்பார்வையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதோ உங்கள் பார்வைக்கு:

+12 pass students temp.job1
+12 pass students temp.job1
+12 pass students temp.job2
+12 pass students temp.job2
+12 pass students temp.job3
+12 pass students temp.job3

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.