டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்து இருக்கின்றது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெழுத்து, வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாளர் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதற்கு எழுத்து தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்வை தமிழக முழுவதும் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருக்கிறார்கள். இந்த தேர்வுக்கான முடிவு அக்டோபர் மதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பணியிடங்கள் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் 11-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலி பணியிடங்களில் எண்ணிக்கை 480 பணிடங்களாக சேர்க்கப்பட்டது. இதற்கு பத்தாயிரம் வரை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.













