கொரொனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய அளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு எதற்கும் வெளியே செல்லக்கூடாது என்று அந்தந்த மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசும் தமிழக மக்களுக்கு குறிப்பாக அன்றாட பிழைப்பை நம்பி வாழும் மக்கள் பயன்ப்படும் வகையில், குறைந்த விலையில் ரேஷன் கடையில் மளிகை பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம் உள்பட 19 வகை மளிகைப் பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
தமிழக அரசின் மளிகை பொருட்கள் தொகுப்புபை கொண்ட விவரங்களை பார்ப்போம்:.








