Latest News

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூணூல் அணிய தடைவிதிக்கப்படும்- வன்னி அரசு- நடிகை கஸ்தூரியின் பதிலடி

Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருப்பதாவது. விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் வருகிறது.

எழுச்சி தமிழர் திருமாவளவன் முதல்வராகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அப்போது தமிழ்நாட்டில் பூணுல் அணிய தடை விதிக்கப்படும் சனாதன ஒழிப்பின் முதல் பணி அதுவே என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலிஆடுகளாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

Trending

Exit mobile version