---Advertisement---

இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள்-அமைச்சர் ஆதங்கம்

Published on: November 12, 2021
---Advertisement---

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் தயாரிப்பான கோவேக்ஸின், கோவி ஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் பலர் . இருப்பினும் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதோர் உள்ளனர்.

ஒரு தடுப்பூசி செலுத்திக்கொண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதோரும் உள்ளனர்.

இவர்கள் 12 கோடி பேர் உள்ளனராம்

79 சதவீதம் பேர் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பிரசாரத்தில் தகுதியான மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2வது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.

பெரு நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள், கோவிட் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். இங்கு மக்கள் அதிகளவில் வருவர். கொவிட் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக நாம் நினைக்க கூடாது. உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனாவில் 80 சதவீதத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியும், கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கின்றன. கோவிட் தடுப்பூசி மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. கோவிட்-19 தடுப்பூசி என்ற பாதுகாப்பு கவசத்துடன், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!