தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், சமீபத்தில் வெளியான ‘அமரன்’ (Amaran) திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்காகத் தனது மூன்றாவது தேசிய விருதைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், இந்த சாதனை குறித்து அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று சினிமா வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. முதல் முறை தேசிய விருது வாங்கியபோது இருந்த அதே உற்சாகம் இதிலும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஜி.வி. பிரகாஷ் கூறுகையில், இது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். பலமுறை இந்த தேசிய விருது தனக்குக் கைநழுவிப் போய்விட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், வெயில், அங்காடித் தெரு, காக்கா முட்டை, ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை மற்றும் மயக்கம் என்ன போன்ற சிறந்த படங்களில் பணியாற்றியபோதே தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அப்போது அது கிடைக்கவில்லை என்றும் கூறினார். இதனால் ஒவ்வொரு முறையும் தேசிய விருது அறிவிக்கப்படும்போது அந்தத் தருணத்தைக் கொண்டாடுவதாகவும், ‘அமரன்’ படத்துக்காகக் கிடைத்த இந்த விருதை தான் அமெரிக்காவில் (US) இருந்துகொண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.













