தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தொடர்ச்சியான வெற்றிகரமான படங்களில் நடித்து வரும் நடிகர் கிிரண் அப்பாவரம், தற்போது பான் இந்தியா அளவில் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேரணா அரோரா தயாரிப்பில், ஸ்ரீகாந்த் புப்பலா இயக்கத்தில் உருவாகவுள்ள பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘இந்திரபுத்ரா’ (Indraputra) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
இந்திய புராணங்களை அடிப்படையாகக் கொண்டு, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான பிரம்மாண்டமான போைக் கதையாக இப்படம் உருவாகிறது. மேலும், இது ஒரு மிகப்பெரிய மைத்தாலஜிக்கல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (Cinematic Universe) முதல் பகுதியாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இப்படம் 2027-ஆம் ஆண்டில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.













