தமிழ் சுயாதீன இசை உலகில் (Independent Music) தற்போது ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து வருகிறார் இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் (Sai Abhyankkar). இவரது இசையில் வெளியாகும் ஒவ்வொரு பாடலும் சமூக வலைதளங்களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வரும் நிலையில், தற்போது அவரது ‘பவழமல்லி’ (Pavazha Malli) பாடல் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தப் பாடல், யூடியூப் தளத்தில் 10 கோடி (100 Million) பார்வையாளர்களைக் கடந்து அதிகாரப்பூர்வமாகச் சாதனை படைத்துள்ளது. சாய் அபியங்கரின் துள்ளலான இசை மற்றும் கயாடு லோஹரின் (Kayadu Lohar) வசீகரமான நடனம் என இந்தப் பாடல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் கவனச்சிதறல்களைத் தவிர்க்க ஸ்மார்ட்போனைத் தவிர்த்துவிட்டு நோக்கியா போன் பயன்படுத்துவதாகச் சாய் அபியங்கர் குறிப்பிட்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பிற்குச் சான்றாக இன்று இந்தப் பாடலின் வெற்றி அமைந்துள்ளது. ‘கட்சி சேர’ பாடலைத் தொடர்ந்து ‘பவழமல்லி’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தையே வியக்க வைத்துள்ளது.
தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ மற்றும் அல்லு அர்ஜூன்-னின் ராக்கா (Raaka) போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபியங்கருக்கு, இந்தப் பெர்சனல் மைல்கல் ஒரு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. “ஒரே ஒரு நோக்கியா போன்.. 1000 பாடல்கள் கைவசம்” – கவனச்சிதறல்களைத் தவிர்த்து சாய் அபியங்கர் படைத்த வெற்றி இது. ஒரு இளம் கலைஞரின் இந்தச் சாதனைச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.













