தமிழ் சினிமாவில் சைபர் கிரைம் மற்றும் தரவுத் திருட்டு போன்ற முக்கியப் பிரச்சினைகளைப் பேசி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இரும்புத்திரை’ (Irumbuthirai). இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் நடிகர் விஷால் (Vishal) நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் ஆரம்பக்கட்டத் தயாரிப்பு குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விஷால் ஒப்பந்தமாவதற்கு முன்பு ‘இரும்புத்திரை’ படத்தின் கதை முதலில் நடிகர் மாதவனிடம் (Madhavan) தான் கூறப்பட்டதாகத் தெரிவித்தார். கதையின் முதல் பாதியை மாதவன் மிகவும் ரசித்துப் பாராட்டியதோடு, ஒரு சிறிய திருத்தத்தையும் Suggest செய்தார். அதனை இயக்குநர் மித்ரனும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால், படத்தின் இரண்டாம் பாதி மீது மாதவனுக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை. இதனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னர்தான் இக்கதை விஷாலிடம் சென்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாகவும் மித்ரன் விளக்கமளித்துள்ளார்.













