தமிழ் திரையுலகில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் சினிமா தகவலின்படி, நடிகர் விஷால் (Vishal) மற்றும் பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் (Lalith Kumar) இடையேயான புதிய கூட்டணி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஷாலின் ‘மகுடம்’ படம் கடைசி நேர வெளியீட்டுச் சிக்கல்களைச் சந்தித்த போது, தயாரிப்பாளர் லலித் குமார் சுமார் ₹7 கோடி வரை நிதி உதவி செய்து உதவியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நன்றிகடன் செலுத்தும் விதமாக, விஷால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் (7 Screen Studio) நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ‘கருடன்’, ‘கொடி’ போன்ற படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் (RS Durai Senthilkumar) இப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விஷாலிடம் கதை கூறியிருந்த துரை செந்தில்குமார் இயக்கத்திலான இத்திட்டம், தற்போது உறுதியாகி விரைவில் படப்பிடிக்காகத் தயாராகி வருகிறது. ‘புருஷன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













