தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தனது வசீகரமான நடிப்பால் ‘இதயம் முரளி’ மற்றும் அதிரடி அவதாரம் எடுத்த ‘பிளாஸ்ட்’ படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து பிளாக்பஸ்டர் நாயகியாக வலம் வரும் நடிகை பிரீதி முகுந்தன் (Preity Mukhundhan), தனது சினிமா நுழைவு குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினர் கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளித்தாலும், தனது கனவை நனவாக்க அவர்கள் எப்படிக் பக்கபலமாக இருந்தார்கள் என்பதை அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உண்மையில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் கல்வியில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். என் வாழ்நாள் முழுவதும் கல்வியில் என்னை ஊக்கப்படுத்தியது போலவே, நான் என் இதயத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சுவாரஸ்யமாக, நான் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 18 வயதாகும்போது, என்னால் முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வேன் என்று நான் தயங்கியபோது, என்னை ஓடிவந்து ஆடிஷன் கொடுக்கத் தூண்டியவர்கள் என் பெற்றோர்தான். அவர்கள் என் கல்லூரி விடுதிக்கு வந்து என்னை உட்கார வைத்து, ‘ஏன் முயற்சிக்கக் கூடாது? பரவாயில்லை, இது ஒரு தொடக்கம்’ என்று ஊக்கப்படுத்தினார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த முதல் முயற்சி தனக்குக் கிடைத்த ஒரு புதிய உலகமாக மாறியதாகவும், ஆரம்பத்தில் தனது பெற்றோருக்கு சினிமா உலகம் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும், நாளடைவில் தானும் சினிமா மீது உண்மையான காதலை வளர்த்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார். தற்போது சினிமாவில் வெற்றிகரமாக வலம் வரும் பிரீதி முகுந்தன், தான் ரசிக்கும் கலைத்திறனைத் தனது வேலைகளிலும் முழுமையாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.













