கடந்த வருடம் கொரோனாவின் போது கடும் பொதுமுடக்கம் செய்யப்பட்டது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போதுதான் கொரோனா அலையில் இருந்து மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர்.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் கடுமையான லாக் டவுன் கொண்டு வந்து விடுவார்களோ என மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த நிலையிலும் லாக் டவுன் கொண்டு வரப்படாது. கொரோனா அதிகம் பரவினாலும் தளர்வுகளுடன் விதிமுறைகளுடன் கூடிய ஊரடங்கே தொடரும் எனதெரிவித்துள்ளார்.













