பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி. இவர் திமுகவின் கழக மேடைகளிலும் தெருக்கூட்டங்களிலும் தேர்தல் நேரத்தில் மிக நகைச்சுவை ததும்ப பேசியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மிகவும் பிடித்தவர்.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சரான முக. ஸ்டாலின் இவருக்கு பாடநூல் கழக தலைவர் பதவி வழங்கி கவுரப்படுத்தியுள்ளார். இது குறித்து லியோனி கூறியிருப்பது என்னவென்றால்,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின்
என்னை பணியில் அமர்த்தி பெருமைப்படுத்தினார். 30ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருந்த எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக நான் கருதுகிறேன்.இன்று காலை தலைமைச்செயலகத்தில் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.













