---Advertisement---

சொல்லி 5 வருஷம் ஆச்சு… இப்ப வரைக்கும் என்ன செஞ்சீங்க… மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என்ன செய்தீர்கள் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருக்கின்றது.

மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதால் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் வாழ்க்கை தரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும். தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.

எனவே இதை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் நேரில் வந்து அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் இன்னும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தொடங்கப்பட்டது. பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்தவிதமான கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகளான சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக டெண்டர் விடப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026க்குள் நிறைவடைந்து விடும். இடையில் கொரோனா காலம் என்பதால் தாமதம் ஆகிவிட்டது என்று தெரிவித்திருந்தார் .

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். விசாரணை முடிவில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போதும் நிறைவடையும் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் எழுத்து பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor and director Vishal locked to release the official action-packed teaser of his 35th movie Magudam under Super Good Films on June 10.

விஷாலின் முரட்டுத்தனமான ஆக்ஷன் சம்பவம்… “மகுடம்” டீசர் ரிலீஸ் தேதி இதோ… தியேட்டர்களை அதிரவிட வரும் SGF99!

Actress Sukanya wins legal battle as Madras High Court orders Sun TV Network to pay 10 lakh damages over 1096 Veerappan interview defamation.

30 ஆண்டுகால அவதூறுக்கு அதிரடி தீர்ப்பு! சன் டிவிக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்… நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

Official fantasy-romance trailer of Khushbu Sundar's Avni Movies production Double Occupancy starring Santhosh and Samyuktha.

“காலைல 6 டூ மாலை 6 அவ ஒரு ரஜினி…” பகலில் பெண் இரவில் ஆண்! அவ்னி மூவிஸின் “டபுள் ஆக்குபென்சி” முரட்டு ட்ரெய்லர் இதோ!

Actor Dhanush and director Rajkumar Periasamy officially welcoming music composer Sai Abhyankkar on board for their upcoming project D55.

‘கச்சி சேரா’ அலை தனுஷ் படத்திலும் வீசப்போகிறது… “D55” இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த வண்டர்பார் ஃபிலிம்ஸ்!

Director Pa Ranjith and actor Arya locked to begin the prequel shooting of their blockbuster boxing movie franchise Sarpatta 2 from July 2026.

கபிலன் – வேம்புலி மோதலுக்கு பின்னால் இருக்கும் அசல் வரலாறு… ‘சார்பட்டா 2’ கதையில் பா.ரஞ்சித் வைத்த முரட்டு சர்ப்ரைஸ்… ஷூட்டிங் தேதி இதோ!

Director Nelson Dilipkumar updating the script layout for Superstar Rajinikanth's upcoming mega-sequel Jailer 2.

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து தூக்கப்பட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கதையை அதிரடியாக மாற்றிய நெல்சன்… இந்த வாரமே தொடங்கும் முரட்டு ஷூட்டிங்!