---Advertisement---

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக போலி தகவலை பரப்பிய சித்த மருத்துவர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

By Sri
Published on: May 5, 2020
---Advertisement---

தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய தவறான கருத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஈடாக அது சம்மந்தமான வதந்திகளும் பரவிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Epidemic Act And Regulation என்ற பிரிவு 8  -ன் படி தடைசெய்யப்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் தனது மருந்தை சீனா பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயாளிகளைக் குணப்படுத்தியதாகவும் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் சமூகவலைதளங்களில் தகவல்களை பரப்பி வந்தார். இந்நிலையில் அவர் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.