சீனா, இத்தாலி நாடுகளில் தன்னுடைய திறமையை காட்டி முடித்து தற்போது இந்தியாவில் ஊடுருவியுள்ளது கொரொனா வைரஸ். ஆனால் தமிழகத்தில் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் கொரொனாவின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனையடுத்து, தமிழகத்தில் பேருந்து, கல்வி நிறுவனங்கள், ஆட்டோ, மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பள்ளிகல்விதுறை பொதுத்தேர்வுகளை தவிர்த்து 1 முதல் 9 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகங்களும் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அதன்படி,
1. பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – ஏப்ரலில் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2. அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு – ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், விரைவில் புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.







