---Advertisement---

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

Published on: April 25, 2022
---Advertisement---

வட மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மருத்துவ துறை உயரதிகாரிகள் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.