இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 29,974லிருந்து 31,332ஆக உயர்ந்துள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,027லிருந்து 7,696ஆக உயர்ந்துள்ளதாகவும்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 937லிருந்து 1,007ஆக உயர்வு! என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரபடி, தமிழத்தில் மிக அதிகபட்சமாக இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் புதியதாக 103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மாநகராட்சி #கோவிட்19 பாதிப்பு குறித்த மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.
அதில், கொரொனா பாதிப்பில், சென்னையில் அதிகபட்சமாக 164 பேருடன் ராயபுரம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








