இந்திய அரசு கொரோனா பரவாமல் தடுக்க மக்களிடம் சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், வீட்டிலேயே இருக்குமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்மொழிந்து வருகின்றது. தமிழகத்தில், இன்றைய தினம் செய்தியாளர்களை சந்திப்பின்போது தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள், இனி வரும் தினங்களில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 25 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1242 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 16ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.








