---Advertisement---

நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

By Sri
Published on: April 13, 2020
---Advertisement---

ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாட இருக்கிறார்.

இந்தியாவில் இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மாநில முதல்வர்களுடான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென கேட்டுகொண்டதாக தகவல் வெளியானநிலையில், பிரதமர் நாளை, ஊரடங்கை வரும் 30 ஆம் தேதி நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.