கொரொனாவின் கோரபிடியில் அனைத்து நாடுகளுமே சிக்கி தவித்து கொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரொனா நுழைந்ததால், கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. அத்துடன் தமிழக அரசு, வீட்டிலே இருங்க! பாதுக்காப்ப இருங்க!! என்ற வாசகத்தை முன்மொழிந்தும் வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 58 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அதிகளவாக இன்று திருவள்ளூரில் 16 பேருக்கும், நாகையில் 12 பேருக்கும், கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 11ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:.








