தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு மெகா கூட்டணி உறுதியாகியுள்ளது. இயக்குநர் மோகன் ராஜா (Mohan Raja) இயக்கத்தில் நடிகர் கார்த்தி (Karthi) நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் உற்சாகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் இயக்குவது குறித்து இயக்குநர் மோகன் ராஜா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கார்த்தியுடன் நான் இணையவுள்ள எனது அடுத்த படம், ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ மற்றும் ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களின் கலவையாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தொடங்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படம் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதவிடக் கூடுதலாக என்னால் எதையுமே கேட்க முடியாது. கார்த்தி தம்பிக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் மாஸ் ஆக்ஷன் கலந்த இந்தப் புதிய கூட்டணி கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













